வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி!

 

வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 1,65,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ் பலரையும் உயிரிழக்க செய்துள்ளது. அந்த வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பல அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி!

நேற்று திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யயானது. அதனால் அவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.