கொரோனா பாதிப்பு!- மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் , அவரது மகள் அனுமதி

 

கொரோனா பாதிப்பு!- மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் , அவரது மகள் அனுமதி

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாய் ராய், அவரது மகள் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு!- மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் , அவரது மகள் அனுமதி

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அபிஷேக் பச்சனின் மனைவியான முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அறிகுறிகள் தென்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.