கன்னியாகுமரியில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி!

 

கன்னியாகுமரியில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி!

இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,499 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்..