கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் மருத்துவ செலவுக்கான நிதி கோரி மனு : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தகவல்!

 

கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் மருத்துவ செலவுக்கான நிதி கோரி மனு : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தகவல்!

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்து கொள்கிறார். ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் மருத்துவ செலவுக்கான நிதி கோரி மனு : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தகவல்!

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “பிரதமருடனான ஆலோசனையில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குவது குறித்து முதல்வர் வலியுறுத்துவார்” என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் மருத்துவ செலவுக்கான நிதி கோரி மனு : அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தகவல்!

தொடர்ந்து பேசியுள்ள அவர், “கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் மருத்துவ செலவுக்கான நிதி கோரி சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். சுகாதாரத் துறை ஆய்வுக்குப் பின்னரே எம்எல்ஏக்களுக்கு கொரோனா சிகிச்சை நிதி வழங்கப்படும்” என்றும் “இ-பாஸ் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் தேவையான தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக சட்டபேரவை உறுப்பினர்கள் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.