கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,914 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு யாவரும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்துடன் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்பி-க்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.