சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,914 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனால் மக்கள் ஒத்துழைப்பு இதுபோன்ற காலக்கட்டத்தில் அவசியம் என தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்த பேரிடர் காலகட்டத்திலும் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக உழைத்து வருகிறார்கள்.

சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆய்வாளர் உட்பட 8 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.