பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

 

பிரதமர் மோடியுடன்  தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதே போன்று மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் அவர்  வலியுறுத்தி வருகிறார்.

பிரதமர் மோடியுடன்  தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழகத்தின் இதுவரை 10 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.  மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா குறைந்து வருவதும், குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

பிரதமர் மோடியுடன்  தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

இந்நிலையில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்து கொள்கிறார். ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.