நாட்டின் 74வது சுதந்திர தினம் : தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

நாட்டின் 74வது சுதந்திர தினம் : தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தினம் : தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி 74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

நாட்டின் 74வது சுதந்திர தினம் : தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
இந்நிலையில் 74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழகத்தை முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் முழுமையாக மீண்டு வெற்றிநடை போடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.