×

முன்னாள் அதிமுக நகராட்சித் தலைவராக தனலட்சுமி கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அம்மா பேரவை செயலர் செல்வ சுப்பிரமணிய ராஜாவின் மனைவி
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட அம்மா பேரவை செயலர் செல்வ சுப்பிரமணிய ராஜாவின் மனைவி தனலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் காரணமாக ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக கடந்த 2011 – 2016 ஆம் ஆண்டில் அதிமுக நகராட்சித் தலைவராக தனலட்சுமி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.