கொரோனாவிலிருந்து குணமடைந்த அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
Jul 28, 2020, 12:06 IST1595918202000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தேனி பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா தொற்றால் குணமடைந்த துரையின் மனைவி, குழந்தைகள் வீடு திரும்பாததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.