புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா; மதுரை,நெல்லையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா; மதுரை,நெல்லையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர் படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா; மதுரை,நெல்லையிலும் அதிகரிக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் புதுக்கோட்டை, நெல்லை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,720 ஆக அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 4,057 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மதுரையில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 10,045ஆக உயர்ந்துள்ளது.