“மாரியப்பன் தங்கவேலு சாதனைப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்” – ஓபிஎஸ்
கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஏற்கனவே மாரியப்பன் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உள்ளிட்ட விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் கேல் விருதை தட்டி சென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பாரா ஒலிம்பிக் வீரர் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. #MariyappanThangavelu அவர்களின் சாதனைப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.