×

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம்: சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு!

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சென்னையில் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் நேற்று கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம்
 

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சென்னையில் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டில் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் நேற்று கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக மதுரவாயல் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.