11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் ஆரம்பம்!
அரசு பள்ளிகளில் 1,6 ,9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கான பள்ளி சேர்க்கையானது இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செய்துள்ளனர். மாணவர்களுடன் வரும் பெற்றோர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் தங்கள் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் அரசு
Aug 24, 2020, 08:55 IST
அரசு பள்ளிகளில் 1,6 ,9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கான பள்ளி சேர்க்கையானது இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செய்துள்ளனர்.
மாணவர்களுடன் வரும் பெற்றோர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் தங்கள் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.