மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா!

 

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவர்க்கும் கொரோனா பரவி வருகிறது. அதே போல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா!

இந்நிலையில் புதுச்சேரி திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வான சிவாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.