×

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3460-ஆக அதிகரிப்பு… நெல்லையில் இன்று ஒரேநாளில் 181 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,116 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,116 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3460-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2013 ஆக உள்ள நிலையில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1416 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது.