விழுப்புரத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று : நெல்லையில் பாதிப்பு எண்ணிக்கை 1, 811 ஆக உயர்வு!
Jul 13, 2020, 09:53 IST1594614199000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,569 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நெல்லையில் மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1, 811 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.