நெல்லை 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு; விழுப்புரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா!

 

நெல்லை 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு; விழுப்புரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிரப் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், நெல்லை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாகவே பாதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

நெல்லை 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு; விழுப்புரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா!

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,026 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, விழுப்புரம் மாவட்டத்திலும் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,712 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.