×

கணவர் இறந்த வேதனையில் மனைவி விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த வேதனையில், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பைத்துந்துறை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (47). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் பச்சையம்மாள் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த பச்சையம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த வேதனையில், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பைத்துந்துறை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (47). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் பச்சையம்மாள் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த பச்சையம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பச்சையம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.