திருக்காட்டுபள்ளியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

 

திருக்காட்டுபள்ளியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

தஞ்சை

திருக்காட்டுப்பள்ளி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த வேலங்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் புவனேஸ்வரி (25). இவருக்கு கடந்த ஆண்டு பழைய ஆற்காடு பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே வரதட்சணை கேட்டு ரெங்கராஜ், புவனேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

திருக்காட்டுபள்ளியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, அவரது உறவினர்கள் புவனேஸ்வரி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய திருக்காட்டுப்பள்ளி போலீசார், இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கணவர் ரெங்கராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒரே ஆண்டிற்குள் மணப்பெண் உயிரிழந்துள்ளாதல் இந்த சம்பவம் குறித்து தஞ்சை ஆர்.டி.ஓ வேலுமணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.