செல்போன் பழுது பார்க்க தாயார் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

 

செல்போன் பழுது பார்க்க தாயார் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

சென்னை

சென்னை ஆவடி அருகே செல்போன் பழுதுபார்க்க தாயார் பணம் தராததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மங்கை(35). இவர்களுக்கு சவுந்தரராஜன்(18), கவுசல்யா(14) என 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த நிலையில், மங்கை குழந்தைகளை வளர்த்து வந்தார். சவுந்தரராஜன் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கூலி வேலைக்கு சென்று வந்தார்.

செல்போன் பழுது பார்க்க தாயார் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

கடந்த செவ்வாய் கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சவுந்தரராஜன், மங்கையிடம் செல்போன் பழுது பார்க்க பணம் கேட்டுள்ளார். அப்போது, மங்கை பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சவுந்தரராஜன், தாயாரிடம் சண்டையிட்டு விட்டு, அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் சவுந்தரராஜன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மங்கை அங்கு சென்று பார்த்தார்.

அப்போது, வீட்டை உள்புறமாக பூட்டிகொண்டு சவுந்தரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழுதார். தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.