குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

தேனி

தேனி மாவட்டம் போடியில் குடும்ப தகராறில் பெண் விஷம் குடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் சுருளி(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், சுருளி, வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துளளார்.

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

இதனால், செல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கணவருடைய நடவடிக்கையால் மன உளைச்சலில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.