×

நீலகிரி அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை… காதல் திருமணம் செய்த மறுநாளே சோகம்!

நீலகிரி நீலகிரி அருகே காதல் திருமணம் செய்த மறுநாளே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன்பாபு (22). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், குமரன் கானியை சேர்ந்த கவுசல்யா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் கவுசல்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து, மோகன்பாபு,
 

நீலகிரி

நீலகிரி அருகே காதல் திருமணம் செய்த மறுநாளே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன்பாபு (22). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், குமரன் கானியை சேர்ந்த கவுசல்யா (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் கவுசல்யாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து, மோகன்பாபு, கடந்த 19ஆம் தேதி திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த கவுசல்யாவை அழைத்துச்சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், கோத்தகரியில் உள்ள தனது வீட்டிற்கு கவுசல்யாவை அழைத்துச் சென்றுள்ளார். தங்களிடம் தெரிவிக்காமல் மோகன்பாபு திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரிடம் பேசவில்லை. மேலும், அவரை தனிக்குடித்தனம் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், கடந்த 20ஆம் தேதி வீட்டில் இருந்து கவுசல்யாவை அழைத்துச்சென்ற மோகன்பாபு, அவரை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு, உடைகளை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். அன்று மாலை ஆகியும் அவர் திரும்பி வராத நிலையில், போனும் அனைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, மோகன்பாபுவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மோகன்பாபு கதவை பூட்டிகொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் கோத்தகிரி போலீசார், மோகன்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.