குடும்பத்தினர் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை… ஆற்காடு அருகே சோகம்!

 

குடும்பத்தினர் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை… ஆற்காடு அருகே சோகம்!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி (33). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவரிடம் ஆற்காடு அடுத்த வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்த திருமணமான சரிதா(34) என்பவர் சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த விவகாரம், இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் உறவை கைவிடும் படி கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடிகளான பாரதி – சரிதா ஆகியோர் நேற்றிரவு வெள்ளக்குளம் பகுதியில் சரிதாவின் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அவர்கள் மரத்தில் சடலமாக தொங்குவதை கண்ட அந்த பகுதி மக்கள் திமிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை… ஆற்காடு அருகே சோகம்!

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், திமிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்தினர் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.