×

நில தகராறில் தனியார் பள்ளி காவலாளி வெட்டிக்கொலை!

தென்காசி சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தனியார் பள்ளி காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த அச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(40). இவர் சேர்ந்தமரம் பகுதியில் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகேசன் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த
 

தென்காசி

சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தனியார் பள்ளி காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த அச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(40). இவர் சேர்ந்தமரம் பகுதியில் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகேசன் என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே டிராக்டரில் வந்த பாலமுருகேசன், கணேசன் வாகனத்தின் மீது டிராக்டரால் மோதினார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கணேசனை, அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து செனறு உடலை மீட்டு பரிதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வெளியூருக்கு தப்ப முயன்ற கொலையாளி பாலமுருகேசனை கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.