சொத்து தகராறில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை!

 

சொத்து தகராறில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை!

விருதுநகர்

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் கூலி தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த, உறவினரை போலீசார் கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். கட்டிட தொழலாளி. கணேசனுக்கும், அதே பகுதியில் வசித்து வரும் உறவினர் கார்த்தி என்பவருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கிராமத்தினர் சமரசம் செய்து அனுப்பி உள்ளனர்.

சொத்து தகராறில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை!

இந்த நிலையில், நேற்று இரவு கணேசன் வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கணேசனை வழிமறித்த கார்த்தி அவரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் கார்த்தி, கணேசனை கீழே தள்ளி அவர் தலையின் மீது கருங்கல்லை தூக்கிப்போட்டார்.

இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.