கள்ளக்காதல் விவகாரத்தில் விதவை பெண் வெட்டிக்கொலை!

 

கள்ளக்காதல் விவகாரத்தில் விதவை பெண் வெட்டிக்கொலை!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விதவைப் பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (35). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் மனோகர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், சங்கீதா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், சங்கீதா இன்று காலை பால்ராம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் விதவை பெண் வெட்டிக்கொலை!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் கச்சிராபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் கச்சிராபாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலையான சங்கீதாவுக்கு, அத்தியூர் பகுதியை சேர்ந்த இளைஞருடன் கள்ளக்தொடர்பு இருந்து வந்ததும், இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.