விநாயகர் வேடமிட்டு ஊர்வலமாக சென்ற பாஜக நிர்வாகி உள்பட 8 பேர் கைது!
Aug 22, 2020, 13:42 IST1598083936000
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி மக்கள் வீடுகளில் வழிப்பட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்த நிலையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விநாயகர் வேடமணிந்து இனிப்பு வழங்கியவரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாஜகவினர் உள்பட 8 பேர் கைதாகியுள்ளனர்.