அமேசானில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ : ஓடிடி-யில் வெளியிட காரணம் இதுதானாம்!

 

அமேசானில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ : ஓடிடி-யில் வெளியிட காரணம் இதுதானாம்!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அமேசானில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ : ஓடிடி-யில் வெளியிட காரணம் இதுதானாம்!

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 5 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும், தியேட்டர் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காததாலும் சூர்யா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து சூர்யா தனது அறிக்கையில், “சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சேர்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகின்ற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக சூரரைப்போற்று நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு, இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். சூரரைப்போற்று திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.