திண்டுக்கல் அருகே குளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

 

திண்டுக்கல் அருகே குளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மீன்பிடித்தபோது குளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (20). கூலி தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள பாறைகுளத்திற்கு மீன் பிடிக்க சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்த காளிதாஸ், தண்ணீரில் இருந்த பாறைகளுக்கு இடையே கால்கள் சிக்கிக் கொண்டதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே குளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் வேடச்சந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்பு அவர்கள் காளிதாஸை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

பின்னர் வடமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.