மேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி!

 

மேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி!

மதுரை

மேலூர் அருகே கிரானைட் குவாரி குட்டையில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரக்சனா (14). இவர் மேலூரில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த ரக்சனா, கீழவளவு அருகேயுள்ள தனது உறவினர் முருகேசன் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று தனது சித்தி முருகேஸ்வரி என்பவருடன் அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்கச் சென்றார்.

மேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி!

குட்டையில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ரக்சனா, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று குட்டையில் தேடினர். அப்போது, சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்த கீழவளவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.