கம்பம் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது- ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்!
Feb 17, 2021, 12:33 IST1613545434000
தேனி
கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோம்பை செல்லும் சாலையில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கம்பம் பகுதியை சேர்ந்த ரத்தினம்(39) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.