சிவகாசியில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

 

சிவகாசியில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

விருதுநகர்

சிவகாசியில் குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம சிவகாசி அம்மன் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(23) என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று பாக்கியராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் நண்பர்களுடன் கேரம் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

சிவகாசியில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை – சார் ஆட்சியர் விசாரணை!

இதனால், ராஜலெட்சுமி அவரை வேலைக்கு செல்லும்படி தெரிவித்துள்ளார். அப்போது கணவன் – மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் கணவர் கடுமையான சொற்களால் திட்டியதால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி மூன்றரை ஆண்டுகளில் ராஜேஸ்வரி உயிரிழந்ததால், இதுகுறித்து சிவகாசி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.