கொரோனாவால் மனைவி இறந்ததால், வேதனையில் கணவர் தற்கொலை!

 

கொரோனாவால் மனைவி இறந்ததால், வேதனையில் கணவர் தற்கொலை!

நெல்லை

சேரன்மகாதேவி அருகே கொரோனா பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததால், வேதனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள வீரவநல்லூரை சேர்ந்தவர் சாலைகண். இவர் வெள்ளிப் பொருட்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

கொரோனாவால் மனைவி இறந்ததால், வேதனையில் கணவர் தற்கொலை!

இதனால் மனவேதனையில் இருந்து வந்த சாலைகண், நேற்று வீட்டில் இருந்த வெள்ளியை உருக்கப் பயன்படுத்தும் திரவாகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாலைகண் உயிரிழந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.