மதுஅருந்த பெற்றோர் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

 

மதுஅருந்த பெற்றோர் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

தூத்துக்குடி

கோயில்பட்டி அருகே மதுஅருந்த பெற்றோர் பணம் தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலங்காரபாண்டி. இவரது மகன் சரண்ராஜ். கூலி தொழிலாளி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரண்ராஜ், மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மதுஅருந்த பெற்றோர் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று சரண்ராஜ் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரண்ராஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த நாலாட்டின் புதூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.