மனைவி பிரிந்து சென்ற வேதனையில், தொழிலாளி தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்ற வேதனையில், தொழிலாளி தற்கொலை!

திருச்சி

ஶ்ரீரங்கம் பகுதியில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி ஶ்ரீரங்கம் திருவடி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (38). கூலி தொழிலாளி ஆன இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். கடந்த ஆண்டு உடல்நல குறைவு காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்து விட்ட நிலையில், குடும்ப தகராறு காரணமாக மகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்ற வேதனையில், தொழிலாளி தற்கொலை!

இதனால் சீனிவாசன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை மகேஸ்வரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீனிவாசன் அவரை வீட்டிற்கு திரும்ப வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனைமுடைந்த சீனிவாசன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.