குளத்தில் மூழ்கி சிறுவன் பலி… வேதனையில் தந்தை தற்கொலை…

 

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி… வேதனையில் தந்தை தற்கொலை…

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி மகன் உயிரிழந்த வேதனையில், வீடியோ கிராபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தகுடி பகுதியை சேர்ந்தவர் வினோத். வீடியோ கிராபர். இவருக்கு சாரதா என்ற மனைவியும், சாம்சன் (10) உள்ளிட்ட 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று சிறுவன் சாம்சன், நாகங்குடியில் உள்ள குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். மாலை ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த வினோத் குளத்திற்கு சென்று பார்த்தார்.

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி… வேதனையில் தந்தை தற்கொலை…

அங்கு சிறுவனை காணாததால், இது குறித்து அவர் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடியபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர், போலீசார் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, மகன் உயிரிழந்ததால் மனமுடைந்த வினோத் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து மகனும், தந்தையும் உயிரிழந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.