மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; திருமணம் நிச்சயமான இளம்ஜோடி பலி!

 

மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்;  திருமணம் நிச்சயமான இளம்ஜோடி பலி!

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருணம் நிச்சயிக்கப்பட்ட இளம்ஜோடி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பெரியத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜித் (23). இவருக்கும், தாளத்துறை கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் பிரியாங்காவுக்கும் (20) நிச்சயம் செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், நேற்று மெட்டி எடுப்பதற்காக அஜித்குமார், பிரியங்கா, அவரது அக்கா செவ்வந்தி ஆகியோருடன் மேட்டுப்பாளையத்திற்கு சென்றிருந்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்;  திருமணம் நிச்சயமான இளம்ஜோடி பலி!

நகை எடுத்த பின்னர், மூவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள புதிய காய்கறி சந்தை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே பொள்ளாச்சியை சேர்ந்த ஷேக் அலாவுதீன்(23) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட அஜித், பிரியங்கா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். செவ்வந்தி, ஷேக் அலாவுதீன், அவருடன் வந்த சாதிக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, பிரியங்கா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.