திண்டுக்கல் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

 

திண்டுக்கல் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே அரசுப்பேருந்து மோதி பெண் கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை அருகே உள்ள ரெங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. நேற்று இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (45) உள்ளிட்ட 2 பெண்களை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக வேகத் தடையில் ஏறியதில், வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் மூவரும் சாலையில் விழுந்த நிலையில், அந்த வழியாக கோடிக்காமன்வாடி நோக்கி சென்ற அரசு பேருந்தின் சக்கரம் பழனியம்மாள் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மற்ற இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.