அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கலை,அறிவியல் படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு www.tngptc.in,www.tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.