குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை… மனைவியும் மாயமானதால் பரபரப்பு!

 

குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை… மனைவியும் மாயமானதால் பரபரப்பு!

தென்காசி

தென்காசியில் குடும்ப தகராறில் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி சிந்தாமணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லசிவன் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா (33). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் சுதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு மகனுடன் மேலகரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நல்லசிவன், நேற்று முன்தினம் தென்காசி யானை பாலம் பகுதியில் உள்ள தோப்புக்கு சென்று விஷம் குடித்தார். பின்னர், இதுகுறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து சென்று, நல்ல சிவனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தற்கொலை… மனைவியும் மாயமானதால் பரபரப்பு!

பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறி, வீட்டில் இருந்து சென்ற சுதா மாயமானதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தந்தை குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாவை தேடி வருகின்றனர்.