திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

தருமபுரி

பென்னாகரம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரித்து வருகிறார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள பெரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மகள் கௌதமி (24). இவருக்கு, சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளியை சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதல் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரையும் பெற்றோர் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அன்று கணவருடன் கோபித்துக் கொண்டு கௌதமி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும், திருமண வாழ்க்கை மீது விரக்தியடைந்து காணப்பட்ட கௌதமி நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பலத்த தீக்கயாமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கௌதமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 7 மாதத்தில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.