தாயார் இறந்த வேதனையில், சத்துணவு அமைப்பாளர் தற்கொலை!

 

தாயார் இறந்த வேதனையில், சத்துணவு அமைப்பாளர் தற்கொலை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தாய் இறந்த வேதனையில், சத்துணவு அமைப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள ஆதிகேசவ நகரை சேர்ந்தவர் உமாதேவி (40). இவர் அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். குடும்ப தகராறில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்ற நிலையில், உமாதேவி தனது தாயார் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இவரது தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தாயார் இறந்த வேதனையில், சத்துணவு அமைப்பாளர் தற்கொலை!

இதனால் மனைமுடைந்து காணப்பட்ட உமாதேவி கடந்த புதன் கிழமை வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த உமாதேவியை, அவரது மகன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உமாதேவி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த வேதனையில் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.