கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் வெட்டிக்கொலை… உறவினர் வெறிச்செயல்…

 

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் வெட்டிக்கொலை…  உறவினர் வெறிச்செயல்…

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதல் விவாகரத்தில் பெண் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள சிந்தலக்கட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி (42). இவரது கணவர் சின்னத்துரை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் ராமலட்சுமி தனியே கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ராமலட்சுமிக்கு வேறு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் கர்ப்பமடைந்த அவர் கடந்த மாதம் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். பின்னர், அந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால், சின்னத்துரையின் அண்ணன் கொம்பன் என்கிற சேகர், ராமலட்சுமியை கண்டித்து, கள்ளத்தொடர்பை கைவிட அறிவுறுத்தி உள்ளார். ஆனால், ராமலெட்சுமி அதனை கேட்க மறுத்து வந்துள்ளார்.

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் வெட்டிக்கொலை…  உறவினர் வெறிச்செயல்…

இதனால் ஆத்திரமடைந்த சேகர், நேற்றிரவு வீட்டில் இருந்த ராமலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி சேகரை தேடி வருகின்றனர். இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் கொலை நடந்த பகுதியை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.