கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

 

கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

தேனி

தேனி அருகே எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி அடுத்த டொம்புசேரியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரது மகன் பிரபாகரன்(28). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மாத குழந்தை உள்ளது. பிரபாகரன், தாடிச்சேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிரபாகரன் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

இதனால், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரபாகரனை பிரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே பிரபாகரன் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தேனி க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.