சொத்து வழங்க மறுத்த தந்தை… கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்…

 

சொத்து வழங்க மறுத்த தந்தை… கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்…

தென்காசி

தென்காசி அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிகொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அடுத்த வீராணம் பகுதியை சேர்ந்தவர் சுடலையாண்டி(69). விவசாயி. இவருக்கு பெருமாள் உள்பட 2 மகன்கள் உள்ளனர். பெருமாள், தனது பங்கு சொத்தை எழுதி தரும்படி தொடர்ந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து வழங்க மறுத்த தந்தை… கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்…

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுடலையாண்டியிடம் சொத்தை எழுதி தருமாறு கேட்டு பெருமாள் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு சுடலையாண்டி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வீரகேரளம் புதூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைதுசெய்தனர்.