சுய உதவிக்குழு கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளம்பெண் தற்கொலை!

 

சுய உதவிக்குழு கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளம்பெண் தற்கொலை!

மதுரை

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி நிர்மலா(36). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவில், கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். தொடக்கத்தில் உரிய முறையில் தவணையை செலுத்தி வந்த நிர்மலா, கடந்த சில மாதங்களாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

சுய உதவிக்குழு கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளம்பெண் தற்கொலை!

இதனால் மகளிர் குழுவினர் பணத்தை கொடுக்கும் படி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிர்மலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நிர்மலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநகர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து சுரேஷ்பாபு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.