இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பெண் பலி!

 

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பெண் பலி!

திருச்சி

முசிறி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்த வாளவந்தி பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (55). இவரது மனைவி சாந்தி(50). இவர் மேகநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று பணிமுடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பெண் பலி!

வாளவந்தி அருகே சென்றபோது சாந்தி வாகனம் மீது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்றொரு வாகனத்தில் வந்த முதலிப்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரும் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் தங்கராசுவை மீட்டு நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சாந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.