இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், முதியவர் பலி!
Feb 20, 2021, 22:12 IST1613839358000
திருச்சி
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அடுத்த நாகப்பா நகரில் வசித்து வந்தவர் கிறிஸ்டோபர் (70). இவர் நேற்று தனது 10 வயது பேரன் மார்ஷல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி காவிரி பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கிஸ்டோபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெங்கவல்லியை சேர்ந்த லாரி ஓட்டுநர் தர்மராஜை கைதுசெய்தனர்.