காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் பெண் கட்டுமான பணியாளர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரியான இவர், காஞ்சிபுரம் பகுதியில் பணியை முடித்துவிட்டு மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவருடன் மகாத்மா காந்தி சாலை பகுதியை சேர்ந்த பெண் ஊழியர் இந்திரா என்பவரும் சென்றார். மாகரல் காவல் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இந்திரா பலத்த காயமடைந்தார். சங்கருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.